Thursday 8 May 2014

அக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று

அக்குபஞ்சர் - 
இயற்கை வைத்தியம்
ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று

 

பிரபஞ்சம் ஓர் "முழுமை


"பிரபஞ்சம் ஒரு சிலந்தி வலை- அதில் ஏதாவது ஒரு இடத்தைத் தொட்டாலும் - வலை முழுவதிலும் அதன் அதிர்வு  உணரப்படும்" என்ற இணையதளத்தில் படித்த  சிலந்தி வலைத் தத்துவம் ("SPIDER WEB PHILOSOPHY")

மற்றும்

"பிரேசிலில் ஒரு பட்டாம்பூச்சி தன் சிறகினை அசைப்பதின் விளைவாக கனடாவிலுள்ள டொராண்டோவில் சூறாவளி எற்படுமா? " என்ற 1972ம் ஆண்டின்  "கேயாஸ் தியரி " (CHAOS THEORY")
- ஆகிய இரண்டு தத்துவங்களும் சொல்வது என்ன?
 
பிரபஞ்சம் ஓர் "முழுமை"
அதன்  அங்கமான நமது உலகமும், நாமும் தனித்தனியே - ஓர் "முழுமை"
     
 "பிரபஞ்சம்" - இன்னும் அது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில்தான் இருக்கிறது. முடிவுகள் வரட்டும். நமது முன்னோர்கள் ஏற்கெனவே கண்டறிந்தது சொல்லிவிட்டார்கள்  "அண்டமும்  பிண்டமும் ஒன்றே" என்று.

பூமியில்- எரிமலை வெடித்து, நெருப்புக்குழம்பை கக்கியபின் பூமிக்கடியில் ஏற்படும், வெற்றிடத்தை நிரப்ப, பாறைத்தட்டுகள் அசைந்து சரி செய்து கொள்கின்றன.  அது பூகம்பம். அதே பூகம்பம் கடலுக்கருகே அல்லது கடலுக்கடியில் நடைபெறுமானால், கடல் நீரின் சமநிலை பாதிக்கப்படுவதனால் சுனாமி ஏற்பட்டு, கடல் தன்னை சமப்படுத்திக் கொள்கிறது. புவியில் வெப்பம் அதிகமாகும்போது, நீரானது ஆவியாகி, மேகமாய் மாறி  மழையைப்பொழிந்து, பூமியைக்குளிரச் செய்கிறது, பூமியில் அதிகமாக பாயும் நீர், வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடி மீண்டும் கடலிலே கலக்கிறது  - நமக்கு இது கண்கூடானது. உலகத்தை இயக்கும் பஞ்ச பூதங்கள் அதன் "முழுமைத்தன்மை" யினை நிலைக்கச்செய்யும் வகையில் நடத்தும் நிகழ்வுகள்தான்  இவை  யாவும்.

இதே வகையாக, நமது உடலிலும், பஞ்சபூதங்கள் ஒரு வரிசைக்கிரமமாக, ஒன்றின் இயக்கக்திற்கு மற்றது காரணமாக அல்லது உறுதுணையாக இருக்கிறது. - அதே நேரத்தில் மற்றொரு வரிசையில் ஒன்று மற்றொன்றை தனது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்துக்கொண்டு ஒரு "முழுமை"யினை நிலை நிறுத்தும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அந்த "முழுமை" எனப்படுவது வேறொன்றும் அல்ல;    நமது "நலம்" எனும் "ஆரோக்கியம்" தான்.

ஆக்கும் சுற்று 


"நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம்" என்ற வரிசையில் ஒன்றிலிருந்து அடுத்ததின் உருவாக்கம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

         நெருப்பு குளிர்ந்து நிலமாகிறது (மண்ணாகிறது)
         நிலத்தினுள் உருவாவது  உலோகம்
         உலோகத்தை உருக்கினால் கிடைப்பது திரவம் - அதாவது நீர்
         நீரின் தன்மையால் வளருவது மரம்
         மரங்கள் உராய்வதினால் உண்டாவது  நெருப்பு
        மறுபடியும் நெருப்பு குளிர்ந்து நிலமாகிறது......

தவிர,  ஒரு மூலகக்திலிருந்து  மற்றொன்று உருவாவதால், உருவாக்கும் மூலகம் "தாய் மூலகம்"  எனவும் உருவாக்கப்பட்ட மூலகம் "சேய் / மகன் மூலகம்" என அழைக்கப்படுகிறது.

       "தாய்" மூலகம்             "சேய்" மூலகம்

            நெருப்பு                         -      நிலம் 
            நிலம்                              -      உலோகம்
            உலோகம்                     -      நீர் 
            நீர்                                     -      மரம்
            மரம்                                -      நெருப்பு



  


இவ்வுருவாக்கம், ஒரு தொடர் நிகழ்வாக அமைவதால், இது "ஆக்கும் சுழற்சி " (GNERATING CYCLE)  அல்லது சீனத்தில் Sheng Cycle  எனப்படும்.

அழிக்கும் சுற்று 


சில பல காரணங்களால், ஒரு மூலகத்தின் செயல்பாடு தேவைக்கு மேல் அதிகமாகும் பொது, அம்மூலகத்தின் "தாயின் தாய் மூலகம்", அதனை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

இவ்வகையில் -

  மரம் அதிக எண்ணிக்கையில் வளர்ந்து நிலத்தை ஆக்கிரமிக்கிறது.
  நிலமானது, தேவைக்குமேல்  நீரினை -  உறிஞ்சிக் கொள்கிறது.
  நீர் அதிகமாகி நெருப்பினை அணைத்து விடுகிறது.
  நெருப்பு அதிகமாகி உலோகத்தை உருக்கி விடுகிறது
  உலோகமாகிய காற்று அதிகமாகி மரத்தை சாய்த்து விடுகிறது.




இந்தச்சுழற்சி "அழிக்கும் சுற்று" (DESTRUCTIVE CYCLE) அல்லது சீனத்தில் Co Cycle  எனப்படும்.ஒரு மூலகம் மற்றொன்றினை அழிக்க முற்படும் செயல், கட்டுப்படுத்தும் வகையிலான  செயலாகவும் அமைகிறது. எனவே இது "கட்டுப்படுத்தும் சுற்று" எனவும் சொல்லப்படுகிறது.


எதிர் வினை சுற்று

 


ஒரு மூலகத்தின்  "சேயின் சேய் மூலகம்"  அம்மூலகத்தின் மீது எதிர் வினை  புரியவும் செய்கிறது.

அதாவது,

நிலம், தன்னை ஆக்கிரமிக்கும் மரத்தை வளரவிடாமல் தடுக்கிறது.
நீர் பெருகி நிலப்பகுதியை மூடிவிடுகிறது.
நெருப்பு நீரினை ஆவியாக்கி விடுகிறது.
உலோகமாகிய காற்றானது நெருப்பை அனைத்து விடுகிறது.
மரங்கள், அதிகமாக வீசும் காற்றை தடுத்து விடுகின்றன.

பஞ்சபூதங்களின் மேற்கூறிய சுழற்சி முறைகள் மிகவும் முக்கியமானவை. அக்குபஞ்சரின் சிறப்பு அம்சமான "நாடிப்பரிசோதனை"யின்படி, சிகிச்சைக்கான புள்ளிகளை தேர்வு செய்ய, இத்தத்துவம் மிகவும் அவசியமானது. பல சந்தர்ப்பங்களில், ஒரே ஒரு அக்குபஞ்சர்  புள்ளியை மட்டும் தேர்வு செய்து சிகிச்சையளித்து, பல பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும். பிரச்சினையின் வெகு ஆரம்பக்கட்டத்திலேயே அதை இனம் கண்டு, அதை வளரவிடாமல் தடுக்கும் வழியும், அக்குபஞ்சர் சிகிச்சையில் நிறைய உண்டு.



                                                         "வருமுன் காப்போம்"

 

 

 

 

No comments:

Post a Comment