Thursday 15 May 2014

பஞ்சபூத மூலகங்களின் குணாதிசயங்கள்

மருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் சிகிச்சையில், இருக்கும் நோய்களை குணப்படுத்துவதற்கும்,  வருமுன் காக்கும் வகையில் சிகிச்சை தருவதற்கும்  "உயிர் சக்தி ஒட்டப்பாதை"யில் அமைந்துள்ள  பஞ்சபூதங்களின் தொடர்பிலான அக்குபஞ்சர் புள்ளிகள் பெரிதும் பயன்படுகின்றன. எனவே பஞ்சபூதங்களான " நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம் " பற்றி நன்கு அறிந்திருக்க  வேண்டியது   மிகவும்  அவசியமாகிறது.

பஞ்சபூத மூலகங்களின் தனித்தன்மை, தனித்தனியே அவற்றின் குணாதிசயங்கள் ஒன்று  மற்றொன்றினுடன்  சேர்ந்து செயலாற்றும் விதம் ஆகியவற்றின் தெளிவு மிகவும் அவசியம்.

அக்குபஞ்சர் சிகிச்சையில் வலி நிவாரணப்புள்ளிகளில் அளிக்கப்படும் சிகிச்சை வலியினை நீக்குவது  மட்டுமல்லாது, அந்த வலி ஏற்படுவதற்குக் காரணமான பிர்ச்சினையினையும்  குணமாக்குகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனினும் பஞ்சமூலகங்களின் நிலையினை நாடிப்பரிசோதனை மூலம்  சோதித்தறிந்து, அதன் அடிப்படையில் தரப்படும் சிகிச்சையே  முழுமையானதாகும்.

எனவே, வரும் பதிவுகளில், நாம்  முதலில் தெரிந்துகொள்ளப்போகும் மூலகம் "EARTH - நிலம், மண் "


                                                         "வருமுன் காப்போம்"


No comments:

Post a Comment