Wednesday 4 June 2014

பஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகளும் அவற்றின் கழிவுகளும்

ஒரு நபரின் உடலில்,  பஞ்சபூத மூலகங்களின் தற்போதைய நிலைப்பாடு  எந்த அளவில் இருக்கிறது என்று நாம் நாடிப்பரிசோதனை மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். எனினும் அதை  உறுதிப்படுத்தும் வகையில், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று - கழிவு நீக்க செயல்பாடு. 

ஒவ்வொரு மூலகத்தின் உள்ளுறுப்பின் செயல்பாடும், அந்தந்த உறுப்பின் கழிவு வெளியேற்றத்தினால்  எளிதாக  உணரப்படுகிறது. ஆரோக்கிய நிலையில், ஒரு உறுப்பின் கழிவின் தன்மை, மற்றும் அளவு  அதன் இயல்பான  நிலையில் அமைந்திருக்கும். உள்ளுறுப்பின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கழிவுகள் வெளியேறுவதில் இயல்பு நிலையில் மாற்றம் நிகழ்கிறது.

அக்குபஞ்சர் தத்துவத்தில், பஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகள் அனைத்திற்குமான கழிவுகள் நாம் எளிதில் அவதானிக்கக்கூடிய வகையில் திரவ நிலையில் அமைந்துள்ளன. அந்த வகையில், "நிலம்" மூலகத்தின் உள்ளுறுப்பான  மண்ணீரலின் கழிவுத்திரவம் எச்சில் எனப்படும் "உமிழ்நீர்" ஆகும்.

நிலம் மூலகத்தின் உறுப்புகளான இரைப்பை மற்றும் மண்ணீரலின் செயல்திறனில் பாதிப்பு ஏற்படும்  வேளையில், அதன் வெளியுறுப்பான வாய் அல்லது  உதட்டில், உமிழ்நீரானது உடனே சுட்டிக்காட்டுகிறது.

அடிக்கடி வாய் உலர்ந்து விடுதல், அல்லது எப்போதும் அதிக உமிழ்நீர் சுரந்து கொண்டிருத்தல் - நிலம்  மூலகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினைக் குறிக்கிறது.

பஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகளும் அவற்றின் கழிவுகளும் பின்வருமாறு :



No comments:

Post a Comment