Friday 24 July 2015

" அமில-காரத்தன்மை " - அக்குபஞ்சர் அறிவியல்

நமது உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் நாம் கைக்கொள்ளவேண்டிய செயல்கள்  பல இருக்கின்றன. அவற்றில்  மிக மிக முக்கியமான ஒன்றாக  கருதப்படுவது  "நமது உடலின் அமில-காரத்தன்மை"யினை  (Acid - Alkaline Scale )  ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பானஅளவில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதாகும். 

"அமில-காரத்தன்மை " (Acid - Alkaline ) - என்பது என்ன?


பொதுவாக ஒரு திரவத்தின் அமில- காரத்தன்மையின் கலப்பு விகிதசாரம், அந்த திரவத்தின் ஹைட்ரஜன் (Hydrogen) மூலக்கூற்றின் செயல்திறனை - அதாவது - potency -யினை கணக்கிட்டு 1 முதல் 14 வரை அளவிடப்படுவதாகும். அதுவே, potency of hydrogen என்பதின் குறியீடாக "pH" என்று குறிப்பிடப்படுகிறது.

சுகாதாரமான குடிநீரின் "pH" குறியீடு 7 ஆகும். இதுவே "நடுநிலை" - neutral - ஆக கணக்கிடப்படுகிறது.

ஒருவரது ஆரோக்கியம் தொடர்ந்து நிலைத்திருக்க, அவரின் உடலில் ஓடும் இரத்தத்தின் இந்த "நடுநிலை" குறியீட்டு  எண் "pH" என்பது   "7.4" ஆக தொடரச்செய்ய வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே "அமிலம்" என்பது பற்றி நாம் அறிவோம். இங்கு "காரத்தன்மை" என்பது Alkalaine  எனப்படும் தன்மையாகும். "உறைப்புச்சுவை"  எனக்கொள்ளுதல் ஆகாது.

"Alkali" யானது,
    -  எளிதில் நீரில் கரையக்கூடியதும்
    -  தொடுவதற்கு வழுவழுப்பானதாகவும்
     - சிகப்பு "லிட்மஸ்" (Litmus) தாளை நீலநிறமாக மாற்றும் தன்மை 
        கொண்டதாகவும், மேலும்
  -  அடர்த்தி கூடிய அல்கலி பொருட்கள் "அரிக்கும்" (corrosive) தன்மை 
      கொண்டது எனவும்,  பள்ளியில் "விஞ்ஞான பாடத்தில்" படித்ததை
      நினைவு கூறுங்கள்.

நமது உடலின் இயல்பான கார- அமிலத்தன்மை சமன்பாடு சீர்குலைந்து, அமிலத்தன்மை  மிகுமேயானால், நமது உடல் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய  கட்டாயத்தில் தள்ளப்படும் என்பது உறுதி.

அமிலத்தன்மை அதிகமானால் விளைவுகள் என்ன?

அமிலத்தன்மை அதிகமாகும் போது, நமது உடலின் அடிப்படை கட்டமைப்பாகிய 'செல்'-லானது தனது அன்றாட கடமைகளை சரிவரச்செய்ய முடியாமல் போகும். 'செல்'-கள் அனைத்தும், இயல்பான முறையில் சுவாசித்தல், உணவு உண்ணுதல், கழிவுகளை நீக்குதல் ஆகிய அத்தியாவசிய கடமைகளை நிறைவேற்ற இயலாத நிலை உருவாகும்.

அதன் காரணமாக,  நமது உடலின் நோய்எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து, நோயினை   எதிர்த்து   போராடும்    திறன்   மிகவும்   குறைந்து   விடுகிறது. விளைவாக, பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைக்காளான் மற்றும் 'பாராசைட்' என்னும் ஒட்டுண்ணிகள் சம்பந்தமான நோய்த்தாக்கங்கள் எளிதில் உடலினுள் புகுந்து ஆரோக்கிய சீர்கேட்டினை உண்டாக்கும்என்பதில் சந்தேகமில்லை.

-அடிக்கடி,எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகுதல்
-அதிக உடல் பருமன்
-அஜீரணக் கோளாறுகள்
-எளிதில் அதிகமாக களைத்துப்போகுதல்
-எலும்பு இணைப்புகளில் அதிக வலி
-எலும்புகள் பலவீனமாகுதல்
-பற்சிதைவு நோய்கள்
-தசைகளில் பிடிப்பும் வலியும்
-எரிச்சலூட்டும் மனஉணர்வு
-சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் அடிக்கடி உருவாகுதல்
-இளவயதில் முதுமை தோற்றம்

                 ஆகியவை நமது உடலில் அளவுக்கு அதிகமாக அமிலத்தன்மை மிகுவதால் ஏற்படக்கூடிய சில விளைவுகளாகும்.


அமிலத்தன்மை மிகுதியாக உள்ள உடலில் கேன்சர் உருவாகுமேயானால், அவை செழித்து(?) வளர வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

"அமில-காரத்தன்மை" சீர்குலைவு ஏன்?

முறையற்ற உணவுப்பழக்கம், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன உளைச்சல், உடலின் சக்திக்கு  மீறிய உழைப்பு, முறையான ஓய்வின்மை - ஆகியவையே காரணங்களாகும்.

நாம் உண்ணும் உணவு யாவற்றையும்- அதிக அமிலத்தன்மை கொண்டது, ஓரளவு அமிலத்தன்மை  கொண்டது, குறைந்த அளவு  அமிலத்தன்மை கொண்டது எனவும், மேலும்  அதிக காரத்தன்மை கொண்டது, ஓரளவு காரத்தன்மை  கொண்டது, சிறிதளவு காரத்தன்மை கொண்டது  எனவும் வகைப்படுத்தலாம் எனச்சொல்லப்படுகிறது. வலைத்தளத்தில் இவை பற்றிய கட்டுரைகள்  ஏராளம். ஆனால் பல உணவுப்பொருட்களைப்பற்றிய அமில-காரத்தன்மை தகவல்கள் சற்று  முரண்படுகின்றன.

ஆனால் - முறையானஉணவுப்பழக்கம், முறையற்ற உணவுச்சேர்க்கை என நம் முன்னோர்களின்  வழிகாட்டுதல் நமக்கு இருக்கிறது.

காலையில் - பகலில் - இரவில் என்னென்ன சாப்பிடலாம்,  என்னென்ன உணவுடன் என்னென்ன உணவைச் சேர்த்து சாப்பிடலாம் / சாப்பிடக்கூடாது ; கோடை - மழை - குளிர் காலங்களில் ஆரோக்கியத்தை பேணும்  உணவு வகைகள் என, பல  குறிப்புகள்  உணவுக்கலாச்சாரமாக நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை மூத்த குடிமக்களிடம்  கேட்டறிந்து கொள்வோம்.

நமது உடலின் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் வகையில், அமில-காரத்தன்மை  சமன்பாட்டில் ஏற்ற இறக்கம் இல்லாதவாறு பார்த்துக்கொள்வதாக அமைந்ததுதான் நமது  முன்னோர்கள் நமக்கு போதித்த உணவுப்பழக்கம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- தயிர்,  மோருடன் வாழைப்பழம்
- மாமிச,  மீன்  உணவுடன்,  தயிர் மற்றும் மோர்
- உளுந்து அதிகம் சேர்த்த  உணவுடன் பால்

என சேர்த்து உண்ணும் போது,  வயிற்றில் புளிப்புச்சுவை அதிகமாகி, அதனால் உடலில் அமிலத்தன்மை கூடிவிடும் என்பதினால், அவற்றை ஒரே நேரத்தில் சேர்த்து உண்ணக்கூடாது என்பது  சித்த  மருத்துவத்தில் சொல்லப்படும் ஆரோக்கிய குறிப்புகள்.

பச்சரிசியினால் செய்யப்பட்ட ஆப்பம் சாப்பிடும்போது அதிகமாக ஏறக்கூடிய அமிலத்தன்மையை  சரிக்கட்ட, neutralizer ஆக தேங்காய்ப்பால் சேர்த்து உண்ண நமக்கு தெளிவாகவே  சொல்லப்பட்டிருக்கிறது நம் முன்னோர்களால்.

வேர்க்கடலையின் புரத்தச்சத்து நமக்கு அவசியம். வேர்க்கடலை அதிகமானால் ஏற்படும் அமிலமிகுதி, அதனுடன் நாம் சேர்த்து சாப்பிடும் பனங்கருப்பட்டியினால் சரிசெய்யப்படுகிறது. அதுதான் "கடலை உருண்டை" எனச் சொல்லவும் வேண்டுமா!

அடுத்ததாக, அதிக உடல் உழைப்பும்/உடற்பயிற்சியும்  உடலின் அமில-காரத்தன்மை சீர்கெட ஒரு காரணமாக அமைகிறது என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், "Stress " - எனப்படும் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல், மேலும் கோபம், பயம், அதிக துக்கம், எளிதில் எரிச்சலடைதல், பொறாமை, தேவையில்லாத கவலை போன்ற எதிர்மறை  எண்ணங்கள் யாவும்  -  உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் வண்ணம், நமது இரத்தத்தில் அமில-காரத்தன்மையின் சமன்பாடு  சீர்குலைய காரணமாக அமைகின்றன.

எப்படி?

நமது மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் - நமது உடலில் அமைந்துள்ள நாளமுள்ள மற்றும் நாளமில்லாத சுரப்பிகளிலிருந்து பலவகை சுரப்புகள்   சுரக்கின்றன என்பதனை நாம் அறிவோம்.

எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் போது, அதன் விளைவாக உடலில் சுரக்கும்  ஹார்மோன் எனப்படும் "இயக்குநீர்" இரத்தத்தில் அமிலத்தன்மையினை வெகுவாக ஏறச்செய்கிறது என்றும்; மாறாக "அன்பு"  "மகிழ்ச்சி" "ஆனந்தம்" ... போன்ற நல்ல எண்ணங்கள், அதிக அமிலத்தன்மையினை மட்டுப்படுத்தும்  வகையில் காரச்சுவையினை (alkaline) சுரக்கச்செய்யும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யக்கூடியதாக  இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம் அமைதியான மனம்தான் என்பதால் தான் "அன்பே சிவம்" என்றார் திருமூலர்.

"அன்பே கடவுள்" - எனும் வாக்கினை ஆராய்ந்தோர் இதனை நன்கறிவர்.

அது சரிதான்...... இப்படியான உணவுகளை தரம் பிரித்து..  தேடித் தேடி ... - அது எல்லோராலும்  சாத்தியமா?

உடல் உழைப்பு? - பகலில் தூங்கி, இரவில் கண் விழித்து, அதிக நேரம் வேலை செய்தால்தானே  வாழ்க்கை ஓடும்?

மேலும், அவசர கதியில் இயங்கும் இந்த பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் மனதைக் கட்டிப்போட  முடியவில்லையே? டென்ஷன், கோபம், பதட்டம், பயம் மன உளைச்சல் ஆகியவற்றை தவிர்க்க  முடிவதில்லையே?

அக்குபஞ்சர் மருத்துவத்தில் "அமில-காரத்தன்மை" சமன்பாட்டுக்கு வழி உண்டா?

நிச்சயமாக உண்டு

அக்குபஞ்சர் அறிவியலில்  - நமது நமது உடலில் பஞ்சபூத சக்திகளை  செவ்வனே இயங்கச்செய்ய  ஆறு சுவைகளும் அன்றாடம்  உணவில் அளவோடு உணவில் சேர்க்கப்பட வேண்டும் என்று  தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பெரும் ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை. அதிகம் சிரமப்பட  வேண்டியதில்லை. ஆறு சுவைகளும்,  அளவோடு,  அன்றாடம்  உணவில் இருக்குமாறு  அமைத்துக்கொண்டால்  நமது உடலின்  அமில-காரத்தன்மை சமப்படும்.  சுவையறிந்து அளவாக  உணவருந்தினால் மட்டுமே  போதும்.

தேவை எனில் அக்குபஞ்சர் மருத்துவரிடம் நாடிப்பரிசோதனை செய்துகொண்டு அவரிடம் ஆலோசனை  பெறலாம். எந்த  மூலகத்தின் நாடியில் சமன்பாடு இல்லையோ, அம்மூலகம் சம்பந்தமான சுவையுள்ள  உணவு  வகைகளை கூட்டவோ குறைத்துக்கொள்ளவோ அவர் ஆலோசனை தருவார். அதன்மூலம்  உடலில் உள்ள அமில-காரத்தன்மை சீர்கேடு சமன்பட வாய்ப்பு நிறைய உண்டு.


உடல் உழைப்பு / பயிற்சி  - அவரவர்  கையில்தானே இருக்கிறது? இதைக்கூட தனது   சொந்த   முயற்சியில் சரி  செய்துகொள்ள முடியவில்லை என்றால் எப்படி?

கட்டிப்போடமுடியாத மனதை அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஒரு சில  அக்குபஞ்சர் புள்ளிகளை, தேவைப்படும் வகையில் தூண்டுவதன் மூலம்,  மனதை சாந்தப்படுத்தி  அமைதி  ஏற்படுத்திக்கொள்ளலாம். தேவைல்லாத பதட்டத்தினால் சுரக்கக்கூடிய  தீமை தரும்  ஹார்மோன் சுரப்புகளைத் தவிர்க்கலாம்.

உணவு - உடல் உழைப்பு - உடலுக்கும் உள்ளத்திற்குமான ஓய்வாகிய உறக்கம் இம்மூன்றினையும் நெறிப்படுத்தி தொடர்ந்து பின்பற்றுவோம்.

                                                  வருமுன்  காப்போம்

10 comments:

  1. Sir, Very informative and useful article. Thank you. S. Alwar

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் . மிக்க நன்றி.

    ReplyDelete
  3. உங்கள் ப்ளாக் படிப்பதர்க்கான வாய்ப்பு கிடைத்தது. அருமையான விளக்கம், ஒவ்வொரு வரிகளும் விளக்கங்களும் மிகவும் தெளிவாக உள்ளது. உடலை பற்றி, உணவுமுறை பற்றி விளக்கங்கள் அருமை. தயவுசெய்து தொடருங்கள், எங்களை போன்ற இயற்கை மீதும், அக்குபஞ்சர் மீதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் . என் மனமார்ந்த நன்றி ஐயா.

    ராஜேஷ்.

    ReplyDelete
  4. மிகவும் நன்று புரூணையிலிறிந்து முகம்மது அன்வர்

    ReplyDelete
  5. Thanks for your information.

    ReplyDelete
  6. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா

    ReplyDelete
  7. Information for very good POOMANI acupuncture MYSORE Gobi chettipalayam KARATUR

    ReplyDelete